Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th January 2025 10:35:44 Hours

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி கடமை பொறுப்பேற்பு

விஜயபாகு காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூஎஸ்என் ஹேமரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக 2025 ஜனவரி 15 ம் திகதி மத ஆசிர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார்.

வருகையை தொடர்ந்து புதிய தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது, பின்னர் 20 வது இலங்கை சிங்க படையணி படையினரால் மரியாதை அணிவகுப்பும் செலுத்தப்பட்டது.

புதிய அலுவலகத்தில், மகா சங்கத்தினரின் 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்ட அவர் ஒரு சந்தன மரக்கன்றை நாட்டியதுடன் குழு படம் எடுத்து கொண்டார்.

பின்னர், புதிய தளபதி, படையினருக்கு உரையாற்றுகையில் படைப்பிரிவின் எதிர்காலம், தனிப்பட்ட மதிப்புகள், தோழமை மற்றும் அதிகாரிகள், சிப்பாய்களின் நல்லொழுக்கத்தின் முக்கியத்துவம் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.