Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th January 2025 14:07:00 Hours

2025 இராணுவ கல்வித் திட்டங்களுக்கு புலமை பரிசுகளுடன் கௌரவிக்கப்பட்ட அதிகாரிகள்

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் 2025 ஜனவரி 10 ஆம் திகதி உயர் இராணுவ கல்வியை தொடரும் அதிகாரிகளுக்கு புலமை பரிசில்களை வழங்கினார்.

இந்நிகழ்வில், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளில், அவர் அடையாளமாக 11 அதிகாரிகளுக்கு தலா ரூரூபா 50000 புலமைபரிசில்களை வழங்கினார்.

இந்த திட்டத்தில் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணி நிலை கல்லூரியின் தகுதி மற்றும் வழங்கல் பணிநிலை பாடநெறி போன்ற திட்டங்களை மேற்கொள்ள தகுதியுள்ள இலங்கை இராணுவத் தொண்டர் படையணி அதிகாரிகளுக்கு 2025 கல்வியாண்டிற்காக செயல்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.