13th January 2025 14:36:07 Hours
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.சி.எல். கலப்பத்தி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 24 வது காலாட் படைப்பிரிவு படையினர் உஹன பிரதேசத்தின் 35 கர்ப்பிணி தாய்மார்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியை 2025 ஜனவரி 09 ஆம் திகதி ருஹுணுகமவில் நடாத்தினர்.
இந்த நன்கொடையில் மகப்பேறு உடைகள், டயப்பர்கள், குழந்தைக்கான பால், சுகாதாரப் பொருட்கள் மற்றும் உலர் உணவு பொதி போன்ற பல்வேறு தாய் மற்றும் குழந்தை பராமரிப்புப் பொருட்கள் அடங்கியிருந்தன. இந்த முயற்சி வசதி குறைந்த குடும்பங்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு, பல கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவியது.
இந்த முயற்சிக்கு ஹேமாஸ் நுகர்வோர் தயாரிப்பு தனியார் நிறுவனத்தின் செயற்பாட்டு தலைவர் திரு. திலின ஜயரத்ன, முதன்மை நிர்வாகத்துடன் இணைந்து நிதியுதவியை வழங்கினார். நன்கொடையைத் தொடர்ந்து, கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.