30th December 2024 12:48:24 Hours
கஜபா படையணியின் புகழ்பெற்ற தலைவரான பாதுகாப்பு பதவிநிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் அவர்களுக்கு கஜபா படையணியில் 29 டிசம்பர் 2024 அன்று கஜபா படையினரின் மகத்துவத்தையும் சிறப்பையும் வெளிப்படுத்தும் வகையில் உணர்வுபூர்வமான பிரியாவிடை வழங்கப்பட்டது. இதன் போது படையணி போர் வீரர் நினைவு தூபியில் மலர் அஞ்சலி செலுத்துவதற்கு முன்னர் கஜபா படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
வெளிசெல்லும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானி அவர்கள் கஜபா படையணி ஸ்தாபகத் தந்தை மறைந்த மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஐ.வி.கே.எம் விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து படையணியின் பெருமை மற்றும் ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சம்பிரதாய அணிவகுப்பு இடம்பெற்றது.
பின்னர், சிரேஷ்ட அதிகாரி படையணி உறுப்பினர்களின் ஒற்றுமை மற்றும் பாராட்டு உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து பங்கேற்பாளர்களுடனும் குழுப்படம் எடுத்து கொண்டார். விழாவை நினைவுகூரும் வகையில், வளாகத்தில் மரக்கன்று நாட்டப்பட்டது.
நிகழ்வின் நிறைவாக அன்றைய தினம் மாலை கஜபா படையணியின் அதிகாரிகளின் உணவகத்தில் பாரம்பரிய இரவு விருந்துபசாரம் நடைபெற்றது.
இந்நிகழ்வு மரியாதை மற்றும் தோழமையை அடையாளப்படுத்தியதுடன், வெளிச்செல்லும் கஜபா படையணியின் சிரேஸ்ட அதிகாரியான பாதுகாப்பு பதவிநிலை பிரதானிக்கு பாரம்பரியம் மற்றும் கௌரவிக்கும் வாய்ப்பு படையினருக்கு கிடைத்தது.