Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th December 2024 18:02:50 Hours

வெளிச்செல்லும் தளபதிக்கு மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தினால் பிரியாவிடை

வெளிச்செல்லும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களுக்கு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் 16 டிசம்பர் 2024 அன்று பிரியாவிடை வழங்கப்பட்டது.

23 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைவாக, அலுவலக வளாகத்தில் உத்தியோகபூர்வ ஒப்படைப்பு ஆவணத்தில் கையெழுத்திட்டு தனது பதவிக்காலம் முடிப்பதற்கு முன்னர் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியதை மற்றும் மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது.

நிகழ்வின் நினைவாக, வெளிசெல்லும் தளபதி அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் தனது பாராட்டு குறிப்புகளை பதிவிட்டார். பின்னர் குழு படம் எடுத்துகொண்டதுடன் அனைத்து நிலையினருக்கும் உரையாற்றிய அவர் தனது பதவிக்காலத்தில் அனைத்து நிலையினராலும் வழங்கப்பட்ட அர்ப்பணிப்புக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

தேநீர் விருந்துடன் நிகழ்வு நிறைவுற்றதை தொடர்ந்து வெளிசெல்லும் தளபதி அனைத்து நிலையினருடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.