Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th December 2024 07:02:38 Hours

அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி - 58 போர் பயிற்சி பாடசாலையில் நிறைவு

அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் ‘தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி’ பாடநெறி - 58 அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையில் 09 டிசம்பர் 2024 அன்று நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது.

இராணுவத்தில் உள்ள பல்வேறு படையணிகளைச் சேர்ந்த எண்பத்தாறு அதிகாரவாணையற்ற அதிகாரிகள் போர்ப் பயிற்சிப் பாடசாலையில் ஒரு மாதம் தங்கியிருந்து பாடநெறியில் கலந்து கொண்டனர். இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.எம்.எஸ்.எல். வீரசுந்தர பாடநெறியின் சிறந்த மாணவராக தெரிவுசெய்யப்பட்டார்.

போர்ப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் எல்.எச்.எம். ராஜபக்ஷ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றினார். போர்ப் பயிற்சிப் பாடசாலையின் தலைமை பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.