07th December 2024 06:16:37 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையணி படையினரால் வெளிச்செல்லும் தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஐஜீ அவர்களுக்கு 02 டிசம்பர் 2024 அன்று கொஸ்கமவில் உள்ள இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை நிகழ்வு வழங்கப்பட்டது.
வெளியேறும் தளபதியை இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதி அன்புடன் வரவேற்றதுடன் அதை தொடர்ந்து பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிரேஷ்ட அதிகாரி மறைந்த கெப்டன் சாலிய அலதெனிய பீ டப்ளியூவீ அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் தொண்டர் படையணி தலைமையக ஊழியர்களுடன் குழு படம் எடுத்துக்கொண்டார்.
அதன்பிறகு, அவர் இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் தனது பதவிக்காலத்தின் முடிவைக் குறிக்கும் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டதுடன் மற்றும் அவரது அலுவலகத்தில் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களையும் வாழ்த்துக்களையும் பதிவு செய்தார். அதைத்தொடர்ந்து நினைவுச் சின்னமாக அலுவலகத்தில் அவரது உருவப்படத்தை சிரேஷ்ட அதிகாரி திறந்து வைத்தார். இந்த சம்பிரதாயங்களைத் தொடர்ந்து, அவர் படையினருக்கு உரையாற்றியதுடன் அனைத்து நிலையினருடனான தேநீரில் கலந்து கொண்டார்.
இலங்கை இராணுவ தொண்டர் படையணி அனைத்து நிலையினர்களின் ஆசீர்வாதங்கள் மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு மத்தியில், இலங்கை இராணுவ தொண்டர் படையணி வளாகத்தின் பிரதான நுழைவாயில் வரை நீட்டிக்கப்பட்ட பாரம்பரிய வழியானுப்பலுடன் அன்றைய நடவடிக்கைகள் நிறைவுற்றன. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படையணி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.