Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd December 2024 08:11:29 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

24 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎல்ஏசி பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களால் தளபதி அலுவலகத்திற்கு 02 டிசம்பர் 2024 அன்று அவரது குடும்பத்தாருடன் அழைக்கப்பட்டார்.

இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பதவிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். அவரது குடும்பத்தினர் அவருக்கு அவரது பணிகாலம் முழுவதும் ஆற்றிய முக்கிய பங்கையும் இராணுவத் தளபதி பாராட்டினார். பதிலுக்கு, மேஜர் ஜெனரல் டபிள்யூஎல்ஏசி பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதி வழங்கிய உறுதியான வழிகாட்டலுக்கு நன்றியைத் தெரிவித்தார். கலந்துரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு விசேட பாராட்டுச் சின்னமும் அவரது குடும்பத்தினருக்குப் பரிசுகளும் வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் இங்கே:

மேஜர் ஜெனரல் டபிள்யூஎல்ஏசி பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 1990 ஒக்டோபர் 15 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியில் பாடநெறி 02 ஊடாக பயிலிளவல் அதிகாரியாக இணைந்துக்கொண்டார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 13 மார்ச் 1991 சிங்க படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் பணிபுரிந்த காலப்பகுதியில் தொடர்ந்து நிலை உயர்த்தப்பட்ட அவர் 09 டிசம்பர் 2023 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2024 டிசம்பர் 04 முதல் தனது 55 வது வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.

8 வது இலங்கை சிங்க படையணி குழு கட்டளையாளர், 8 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி, 12 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி, 8 மற்றும் 12 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி, 23 வது காலாட் படைப்பிரிவின் பொதுப்பணிநிலை அதிகாரி 3 (செயல்பாடுகள்), 8 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி, காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைப்பின் ஸ்திரப்படுத்தல் பணியில் இராணுவ இராணுவ கண்காணிப்பாளர், இலங்கையின் அமைதி ஆதரவு செயற்பாடுகள் பயிற்சி நிறுவனத்தில் அதிகாரி பயிற்றுவிப்பாளர், கொழும்பில் உள்ள கூட்டு செயல்பாட்டுத் தலைமையகத்தில் பணி நிலை அதிகாரி2 (செயல்பாடுகள்/திட்டம்), 12 வது இலங்கை சிங்க படையணி இரண்டாம் கட்டளை அதிகாரி, சிங்க படையணி தலைமையக நிறைவேற்று அதிகாரி, 12 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பொது பதவி நிலை அதிகாரி 1 (பயிற்சி உதவி), கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக பொது பணி நிலை அதிகாரி 1, இராணுவ தலைமையகத்தின் போர் கருவி பணிப்பக பணிநிலை அதிகாரி 1(விலைமனுகோரல் பகுதி), இலங்கை சிங்க படையணி தலைமையக பணிநிலை அதிகாரி1 (நிர்வாகம்), இலங்கை சிங்க படையணி பிரதி நிலைய தளபதி, 14 வது காலாட் படைப்பிரிவின் கேணல் (பொதுப்பணிநிலை),652 வது காலாட் பிரிகேட் தளபதி, 532 வது காலாட் பிரிகேட் தளபதி, அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் (செயற்பாடுகள்), 52 வதுக காலாட் படைப்பிரிவின் துணை தளபதி, இராணுவ தலைமையகத்தின் போக்குவரத்து பணிப்பக பணிப்பாளர் நாயகம் மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி போன்ற நியமனங்களை வகித்துள்ளார்.

போர்க்களத்தில் அவரது துணிச்சலுக்காக ரண விக்கிரம பதக்கம் (இரண்டு முறை), ரண சூர பதக்கம் (மூன்று முறை) மற்றும் அவரது சிறப்புமிக்க மற்றும் விசுவாசமான சேவைக்காக உத்தம சேவா பதக்கம் வழங்கப்பட்டது. அவரது இராணுவ வாழ்க்கை முழுவதும், சிரேஷ்ட அதிகாரி படையலகு படையலகு கட்டளை அதிகாரிகள் பாடநெறி, படையணி சமிக்ஞை அதிகாரிகள் பாடநெறி, பீரங்கி கண்காணிப்பு பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுத அதிகாரிகள் பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படை பயிற்றுவிப்பாளர் பயிற்சி மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் உயர் பாடநெறி, பாகிஸ்தான் அதிகாரி பயிலிளவல் அதிகாரி பயிற்சி, பாகிஸ்தான் இளம் அதிகாரிகள் காலாட் படை பயிற்சி, இந்தியா கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வனபோர் (அதிகாரிகள்) பாடநெறி, இந்தியா கனிஷ்ட கட்டளை பாடநெறி மற்றும் பங்களாதேஷில் ஐக்கிய நாட்டு அமைதி ஆதரவு நடவடிக்கை பாடநெறி உட்பட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கற்கைகளை பயின்றுள்ளார்.

இந்தியா தேவி அஹில்யா விஸ்வ வித்தியாலையவில் முதுநிலை பாதுகாப்பு முகாமைத்துவ டிப்ளோமா, சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் சர்வதேச உறவுகளுக்கான டிப்ளோமா, இலங்கை பணியாளர் முகாமை நிறுவனத்தில் பயிற்சி மற்றும் மனித வள அபிவிருத்திக்கான தேசிய டிப்ளோமா, விஞ்ஞான முதுகலைப் பட்டம் ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் மற்றும் நிறுவனத்தில் மனித வள முகாமைத்துவத்தில் நிபுணத்துவ தகைமை இலங்கையில் பணியாளர் மேலாண்மை ஆகிய கற்கைகளையும் பயின்றுள்ளார்.