30th November 2024 14:23:07 Hours
27 நவம்பர் 2024 அன்று சிவபுரம், பாலிநகரில் கடுமையான வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தை மீட்க இலங்கை கடற்படையின் புவனேகா பிரிவின் கடற்படை சிப்பாய்களுடன் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் இணைந்து பணியாற்றினர்.
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 561 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையுடன் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரியின் தலைமைத்துவத்துடன் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.