16th November 2024 19:10:22 Hours
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ. கொடிதுவாக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் 10 நவம்பர் 2024 அன்று கம்பளை ஸ்ரீ சகிந்தாராம புராண மகா விகாரையில் புதிய சந்நிதி மற்றும் புத்தர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வு 114 வது வருடாந்த கட்டின பின்கம நிகழ்ச்சியுடன் இணைந்து நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் மதகுருமார்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.