Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th October 2024 18:18:26 Hours

5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி சிப்பாய்க்கு புதிய வீடு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜீஎம்என் பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி மற்றும் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வஜிர பெரேராவின் மேற்பார்வையில் வீட்டு நிர்மாண பணி 06 ஜூலை 2024 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

இம் முயற்சியின் நிமித்தம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு, சாஜன் டபிள்யூஎஸ் விதானகே அவர்களுக்கு 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் யூஎன்டிசீ தர்மசிறி ஆர்டபிள்யூபீ அவர்கள் தனது மனைவியுடன் இணைந்து 04 ஒக்டோபர் 2024 அன்று கொஸ்கமவில் வைத்து கையளித்தார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.