10th October 2024 21:28:20 Hours
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தபால் திணைக்களத்தின் தபால்தலைகள் பணியகத்தினால் விசேட நினைவு முத்திரையொன்று வியாழக்கிழமை (10) வெளியிடப்பட்டது. இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்வானது பனாகொடவில் உள்ள இராணுவ முகாம் வளாகத்தில், இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் இடம்பெற்ற பிரதான நிகழ்வினை தொடர்ந்து இடம்பெற்றது.
தபால் மா அதிபர் திரு. எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பீ. சத்குமார, பிரதி தபால் மா அதிபர் திரு. டி.ஏ. ராஜித கே.ரணசிங்க மற்றும் அவர்களது ஊழியர்கள் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்குபற்றியதுடன் ஆண்டுவிழாவின் முதல் அட்டை முத்திரையிடப்பட்டு முறையாக பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டது.
தபால் மா அதிபர் அவர்களிடமிருந்து முதல் அட்டையை இராணுவத் தளபதி பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதி தபால் மா அதிபர் அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி வைத்தார். அத்துடன் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களுக்கும் சிறப்பு முத்திரை அட்டை வழங்கப்பட்டது.
அதன் பின்னர் ஆண்டு நிறைவு விழாவின் தொடர்ச்சியாக இராணுவ தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை இராணுவ தளபதி நாட்டினார்.
இந்நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதி, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம், பணி நிலை அதிகாரிகள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.