Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th October 2024 17:27:27 Hours

4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி மற்றும் பிரதேச தொடர்புடையவர்களினால் பசவக்குளம் நீர்த்தேக்கத்தில் சிரமதானம்

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அதிகாரிகள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்களுடன் இணைந்து 2024 செப்டம்பர் 30 ஆம் திகதி அனுராதபுரம் பசவக்குளம் நீர்த்தேக்கத்தில் சிரமதான பணியை மேற்கொண்டனர்.

212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்.எம்.சி ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த முயற்சி நடாத்தப்பட்டது.