02nd October 2024 13:30:21 Hours
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை கவச வாகனப் படையணி 2024 செப்டம்பர் 26 ஆம் திகதி வத்தளை பிரிதிபுர இல்லத்தில் சிரமதான பணியை மேற்கொண்டது. மேலும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தேநீர் வழங்கப்பட்டதுடன், இல்லத்தில் வசிப்பவர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது.