Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th September 2024 21:27:20 Hours

24 வது காலாட் படைப்பிரிவினால் கடற்கரை தூய்மையக்கல்

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூஎல்ஏசி பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் சர்வதேச கடற்கரை துப்புரவு தினத்தை முன்னிட்டு கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை சுத்திகரிப்பு 10 செப்டம்பர் 2024 அன்று நடைபெற்றது.

வேலைத்திட்டத்தின் கீழ் அக்கறைப்பற்று சின்னமுஹத்துவாரம் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் 03 அதிகாரிகளும் 25 சிப்பாய்களும் இணைந்தனர். இதன்படி, 1500 மீற்றர் கரையோரப் பகுதி சுத்தப்படுத்தப்பட்டதுடன், கல்முனை கடற்படைத் தளத்தைச் சேர்ந்த 26 படையினரும், கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் 19 ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.