Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th August 2024 12:51:51 Hours

3 வது தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் தேவையுள்ள குடும்பத்திற்காக புதிய வீடு

இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 3வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் செல்ல கதிர்காமத்தில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டு 2024 ஆகஸ்ட் 06 அன்று பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜிஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். திரு. ஹிரோஷ் ஜயதிலக்க மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த திட்டத்திற்கு அனுசரணை வழங்கினர், இத் திட்டம் 3வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் அவர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் பணியாளர்களின் உதவியுடன் 3வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் , நன்கொடையாளர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பயனாளியின் குடும்ப உறவினர்கள் கலந்துகொண்டனர்.