25th July 2024 20:07:35 Hours
புனித கதிர்காமத்தில் 2024 ஜூலை 6 முதல் 22 ஜூலை 2024 வரை நடைபெற்ற ருஹுணு மகா கதிர்காமம் எசல பெரஹரவிற்கு 12 வது காலாட் படைப்பிரிவின் படையினர் பொலிஸாரின் ஒருங்கிணைப்பில் பாதுகாப்பு வழங்கினர்.
12 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீகேடபிள்யூடபிள்யூஎம்ஜேஎஸ்பி பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் பிரிகேட்களின் தளபதிகள் மற்றும் படையலகுகளின் கட்டளை அதிகாரிகளின் நெருக்கமான மேற்பார்வையில் படையினர் பக்தர்களுக்கு பாதுகாப்பை வழங்கியதுடன், மருத்துவ உதவிகளையும் கதிர்காமம் விஹாரையில் தானம் வழங்கும் பணியையும் முன்னெடுத்தனர். அத்துடன் 6 ஜூலை 2024 முதல் 21 ஜூலை 2024 வரை சுமார் 20,000 பக்தர்களுக்கு தினமும் மூன்று நேர உணவை தயாரித்து வழங்கினர்.