03rd July 2024 17:11:22 Hours
பிபிலை பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க. 12 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 12 வது காலாட் படைப்பிரிவு படையினர் 2024 ஜூன் 28 ஆம் திகதி பிபிலை, வெல்லஸ்ஸ தேசிய பாடசாலையில், மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த மரத்தை அகற்றினர்.
படையினரின் திறமை மற்றும் விரைவான இச்செயற்பாடு பாடசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு இன்றி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது. இராணுவத்தின் இந்த முயற்சிக்கு அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.