24th June 2024 22:26:55 Hours
இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வஜிர பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 21 ஜூன் 2024 அன்று பொசன் பண்டிகையை கொண்டாடும் வகையில் மரவள்ளிக்கிழங்கு அவியல் பனாகொடவில் வழங்கப்பட்டது.
உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜீஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் தானத்தில் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.