10th June 2024 17:37:05 Hours
241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்.எஸ்.டி.என் பத்திரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 மே 31 ஆம் திகதி அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள தம்மரத்ன சிங்கள பாடசாலைக்கு பழுதுபார்க்கப்பட்ட இசைக்கருவிகளை படையினர் கையளித்தனர்.
பாடசாலையின் இசைக்கருவிகள், நாடகப் பிரிவில் பயன்படுத்தப்பட்டதுடன் நீண்ட பயன்பாட்டிற்குப் பிறகு அக்கருவிகளை பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது. அதிபரின் வேண்டுகோளின் பேரில், பிரிகேட் படையினர், மாத்தறையில் உள்ள முன்னணி இசைக்கருவி உற்பத்தி நிறுவனமான ஸ்ரீ மதுராவின் ஆதரவுடன் கருவிகளை சீர் செய்தனர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.