20th May 2024 19:42:07 Hours
12 வது காலாட் படைபிரிவு படையினரால் 2024 மே 11 ம் திகதி விஹாரமஹாதேவிபுரவில் ஒரு ஆதரவற்ற குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நாட்டப்பட்டது. பன்னிபிட்டியவில் வசிக்கும் திரு. ஜி. கொரத்தொட்ட அவர்களின் நிதியுதவியுடன் 12 வது கஜபா படையணியின் படையினரால் இக் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 12 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சிஎஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்துகொண்டதுடன்,சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.