Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th April 2024 20:52:48 Hours

5 வது (தொ) இலங்கை பீரங்கிப் படையணியினால் தகுதியான குடும்பத்திற்கு புதிய வீடு

5 வது (தொ) இலங்கை பீரங்கிப் படையணி படையினர் 2024 ஏப்ரல் 25 ஆம் திகதி கந்தளாய், தல்கஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் தகுதியான குடும்பத்திற்கு புதிய வீடு கட்டுவதற்கான ஆரம்பத்தை குறிக்கும் வகையில் அடிக்கல்லை நாட்டினர்.

22 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஏ.எம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 5 வது (தொ) இலங்கை பீரங்கிப் படையணி படையினரால் இந்த திட்டத்திற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், திரு. சந்துஷ் வீரமான் அவர்களினால் இந்த திட்டத்திற்கு தேவையான நிதியுதவி வழங்கப்படுகின்றது.

22 வது காலாட் படைப்பிரிவு தளபதி அவர்கள் நன்கொடையாளர்களாகிய திரு.சந்தூஷ் வீரமன் மற்றும் திரு.பாத்தியா ஜயக்கொடி ஆகியோருடன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டனர். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளியின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.