Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th April 2024 20:55:14 Hours

நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் புத்தல இராணுவ போர் கல்லூரிக்கு விஜயம்

நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2024 ஏப்ரல் 25 ஆம் திகதி இராணுவப் போர்க் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டார். அவரது இந்த விஜயத்தின் நோக்கம் கல்லூரியின் நிர்வாக மற்றும் கல்விசார் செயல்பாடுகள் தொடர்பான தற்போதைய செயல்முறைகள் குறித்து விசாரிப்பதாகும்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார்.

பின்னர், நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கு இராணுவப் போர்க் கல்லூரியின் செயல்பாடுகள் பற்றிய விரிவான விளக்கம் தளபதியினால் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்கள் தனது உரையின் போது இராணுவத்தினால் கல்லூரிக்கு ஒப்படைக்கப்பட்ட அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மேலும், அதிகாரிகள் உணவகத்தில் மதிய உணவில் கலந்து கொள்ள முன்னர் சிரேஷ்ட அதிகாரி கல்லூரி வளாகத்தைப் பார்வையிட்டார். பின்னர் இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கு சிறப்பு நினைவுச்சின்னத்தை வழங்கினார், மேலும் அவர் புறப்படுவதற்கு முன்பு விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் சில பாராட்டுக்களை எழுதினார்.

இந்நிகழ்வில் இராணுவப் போர்க் கல்லூரியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்ப்ய்கள் கலந்து கொண்டனர்.