Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th April 2024 10:15:54 Hours

14 வது இலங்கை பொறியியல் படையணினால் ஏரிவாயு கசிவு தடுப்பு

5 ஏப்ரல் 2024 அன்று வெலிவேரியவில் உள்ள லங்கா ஸ்டீல் நிறுவனத்தில் ஏற்பட்ட அபாயகரமான வாயு கசிவுக்கு 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணியினால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்படக்கூடிய தீங்கு தடுக்கப்பட்டது.

வெலிவேரிய, எம்பரலுவ பகுதியில் அமைந்துள்ள பழைய உலோகங்கள் சேகரிக்கும் இடத்தில் 111 கிலோகிராம் சிலிண்டரிலிருந்து வாயு வெளியேறுவது குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் அவர்களால் 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணிக்கு அறிவிக்கப்பட்டது.

இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் வழிகாட்டுதலின் கீழ் 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணி கட்டளை அதிகாரி மேஜர் எம்ஜே சல்காடு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் நிலமை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.