Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th April 2024 11:35:06 Hours

மேலும் ஒரு தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீட்டிற்கு அடிக்கல் நாட்டல்

திருகோணமலையில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பத்திற்கு வீடு நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 04 ஏப்ரல் 2024 அன்று இடம்பெற்றது.

4 வது கவச வாகன படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டிஎம்டப்ளியூஎம்ஆர் திசாநாயக்க ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் மேற்பார்வையின் கீழ் 4 வது கவச வாகன படையணி படையினரால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 4 வது கவச வாகன படையணி படையினரால் மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகளுக்கு திரு.ருச்சிர விதானகே நிதி அனுசரணையை வழங்கினார்.

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரீஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந் நிகழ்வின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.