02nd April 2024 14:41:32 Hours
21 வது காலாட் படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் 07 மார்ச் 2024 அன்று மிஹிந்தலை கலுடியா பொகுண மலையில் மலை ஏறும் உல்லாசப் பயணத்தை மேற்கொண்டனர். இந்தச் செயல்பாடு தோழமையை வலுப்படுத்துதல், குழுப்பணியை மேம்படுத்துதல் மற்றும் சக ஊழியர்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது.
இந்த சவாலான நிகழ்வு 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ் ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் ஆதரித்து, ஒருங்கிணைந்த குழுவாக பணியாற்றினர். இந்த அனுபவம் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆதரவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி அவர்களின் பிணைப்பை வலுப்படுத்தியதுடன் தடைகளை ஒன்றாக சமாளிப்பதற்கான ஆற்றலை மேம்படுத்தியது.
இப்பயணம் மஹா கனதராவ குளத்தருகில் முடிவடைந்தது. இது 21 வது காலாட் படைப்பிரிவின் பங்கேற்பாளர்களுக்கு ஒரு மறக்கமுடியாத நினைவுகளை ஏற்படுத்தும் பயணமாகும்.