10th March 2024 11:00:26 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் பேரின்ப மனங்கள் சமூக அமைப்பின் அனுசரணையுடன் மதுரங்கல ஆரம்ப பாடசாலையில் தரம் 1 முதல் 5 வரை கல்வி கற்கும் 47 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை 2024 மார்ச் 06 ஆம் திகதி பாடசாலையில் ஏற்பாடு செய்தது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகம் பணிநிலை அதிகாரிகள் மற்றும் 2 வது (தொ) இராணுவ சமிக்ஞை படையணி படையினர் இந்நிகழ்ச்சிக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி கலந்து கொண்டதுடன், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் பேரின்ப மனங்கள் சமூக அமைப்பின் உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.