Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th February 2024 12:41:26 Hours

இராணுவ சேவை வனிதையரினால் இராணுவ தலைமையக இராணுவ மற்றும் சிவில் ஊழியர்களுக்கு 100 நிவாரணப் பொதிகள்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் இராணுவத் தலைமையகத்தில் பணிபுரியும் இராணுவ மற்றும் சிவில் ஊழியர்களுக்கு 100 உலர் உணவுப் பொதிகள் செவ்வாய்க்கிழமை (பெப்ரவரி 27) இராணுவ சேவை வனிதையர் காரியாலயத்தில் வழங்கப்பட்டன.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் அந்த நிவாரணப் பொதிகளை தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினார். இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.