Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th April 2024 14:42:08 Hours

வெளியேறும் இராணுவ புலனாய்வு படையணியின் படைத்தளபதிக்கு பிரியாவிடை

இராணுவ புலனாய்வு படையணி படையினர் 09 ஏப்ரல் 2024 அன்று இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்தில் வெளியேறும் படையணி படைத்தளபதியான இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்களுக்கு முறையான பிரியாவிடை அணிவகுப்பு மரியாதையினை வழங்கினர்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியினை இராணுவ புலனாய்வு படையணி நிலைய தளபதி அன்புடன் வரவேற்றார்.தொடர்ந்து தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் படைத்தளபதி இராணுவ புலனாய்வு படையணி நினைவு தூபியில் மறைந்த இராணுவ புலனாய்வு படையணியின் வீர்ர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், அணிவகுப்பு மைதானத்தில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டதுடன் இராணுவ புலனாய்வு படையணி படையினருடன் தளபதி குழுப்படம் எடுத்துக்கொண்டார்.தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரி படையினரிக்கு உரையாற்றியதுடன் தனது பதவிக்காலத்தில் அவர்கள் வழங்கிய ஆதரவைப் பாராட்டினார்.

இதைத் தொடர்ந்து, அவர் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்தில் பங்கேற்று, இராணுவ புலனாய்வு படையணியில் பணியாற்றும் படையினர் மற்றும் சிவில் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

அன்றைய நிகழ்வுகளின் உச்சக்கட்டமாக, அதிகாரியின் உணவகத்தில் இரவு விருந்தில் கலந்துகொண்ட பின்னர் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றம் நடைபெற்றது. இறுதியாக, விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை எழுதினார்.