06th August 2024 18:31:08 Hours
விஷேட படையணி தலைமையகத்தில் புதிதாகக் நிர்மாணிக்கப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகள் தங்கும் கட்டிடம் 31 ஜூலை 2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் விஷேட படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் கலந்துகொண்டார்.
புதிய தங்குமிட வளாகம், படையணியின் நீண்டகால தேவையை பூர்த்தி செய்கின்றதுடன் தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய 8 அறைகளைக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் விஷேட படையணி நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.