Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th May 2025 12:16:39 Hours

வன்னி பாதுகாப்புப் படையினரின் வெசாக் நிகழ்ச்சி

வெசக் போயா தினத்தை முன்னிட்டு, 2025 மே 10 ஆம் திகதி வண. மடுகந்த தேரரினால் 1,000 இராணுவ வீரர்களின் பங்கேற்புடன் நான்கு மணி நேர சொற்பொழிவு நடாத்தப்பட்டது. 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஆர்.என். ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 591, 592 மற்றும் 593 வது காலாட் பிரிகேட் தளபதிகள், பணிநிலை அதிகாரிகள் மற்றும் வழங்கல் குழுக்களின் மேற்பார்வையின் கீழ் இந்த நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.

59 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2025 மே 11 அன்று வெசாக் போயா தினத்தை கொண்டாடும் வகையில் தொடர்ச்சியான நிகழ்வுகளை நடாத்தினர். 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஆர்.என். ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் 250 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், கொலன்னாவை மாவட்டம் 306 சி1, சர்வதேச லயன்ஸ் கழகத்துடன் இணைந்து 280 பொதுமக்களுக்கு நீரிழிவு பரிசோதனை மற்றும் கண் சிகிச்சை ஆகியவை அடங்கும். லயன்ஸ் கண் மருத்துவமனையின் ஆலோசகர் கண் மருத்துவர்களின் பரிசோதனைகளுக்குப் பிறகு 300 க்கும் மேற்பட்ட பார்வைக் குறைபாடுள்ள நபர்கள் கண்ணாடிகளைப் பெற்றனர்.

இதற்கிடையில், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வவுனியா போதி தட்சிணாராம விகாரையின் பிரதம தேரரின் ஆதரவுடன், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் 2025 மே 12 அன்று வவுனியா வெசாக் வலயத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கினர். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, வெசாக் பண்டிகையில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கி, மூலிகை பான தானம் வழங்கினர்.

59 வது காலாட் படைப்பிரிவினரால் 2025 மே 12 மற்றும் 13 ம் திகதிகளில் புதுக்குடியிருப்பு நகராட்சி மன்ற மைதானத்தில் வெசாக் கூடு மற்றும் அன்னதானம் மற்றும் ஐஸ் கிரீம் தானம் என்பன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் 15,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுடன் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர் திருமதி ஜி.ஏ. குலதுங்க ஆகியோர் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.

வெசாக் வலயத்தில் பௌத்த, இந்து மற்றும் கிறிஸ்தவ பொதுமக்கள் உட்பட பல மதங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும், 54 வது காலாட் படைப்பிரிவின் படையினர் வெசக் கொண்டாட்டத்துடன், போதி பூஜை மற்றும் வெசாக் தானம் ஆகியவற்றை 54 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 2025 மே 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் வரலாற்று சிறப்புமிக்க மாந்தோட்ட ராஜமகா விஹாரையில் வெசாக் பண்டிகையைக் கொண்டாடினர். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

212 வது காலாட் பிரிகேட் படையினர் வெசாக் பண்டிகையை கொண்டாடும் விதமாக, 212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பி.ஏ.எம்.பீ பாலசூரிய ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தொடர்ச்சியான நிகழ்வுகளை நடாத்தினர்.

2025 மே 12 ஆம் திகதி சாலியபுர சத்துட சிறுவர் இல்லத்தில் நன்கொடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சிறப்பு தேவையுடைய 29 சிறுவர்களுக்கு அத்தியாவசிய சுகாதார பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. சிறுவர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்வுகளுடன், இரவு உணவும் வழங்கப்பட்டது.

நிகழ்வைத் தொடர்ந்து, 2025 மே 13 ஆம் திகதி 212 வது காலாட் பிரிகேட் வளாகத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் கொத்தமல்லி தானம் வழங்கப்பட்டது.

212 வது காலாட் பிரிகேடினால் வெசாக் தினத்தை முன்னிட்டு நன்கொடை மற்றும் தானம்

54 வது காலாட் படைப்பிரிவினால் வெசாக் கொண்டாட்டம்

59 வது காலாட் படைப்பிரிவினரால் வெசாக் கூடு மற்றும் தானம் நிகழ்வு

வவுனியா வெசாக் வலயம் நிகழ்வுக்கு வன்னி பாதுகாப்பு படையினரின் ஆதரவு

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வெசாக் கொண்டாட்டம்

59 வது காலாட் படைப்பிரிவின் வெசாக் போயா தின கொண்டாட்டம்