28th February 2024 11:52:28 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான மேஜர் நிலையுயர்வு பரீட்சைக்குத் தயாராகும் கெப்டன்களுக்கான ஒரு வார கால மீட்டல் பயிற்சியானது 2024 பெப்ரவரி 19 முதல் 25 வரை 75 க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியானது அதிகாரிகளின் அறிவைப் புதுப்பித்து, வரவிருக்கும் பரீட்சைக்கு அவர்களை தயார்நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
பயிற்சி பணிப்பகம் மற்றும் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகம் ஆகியவற்றினால் இந்த பாடநெறி ஒழுங்கமைக்கப்பட்டு மேற்பார்வையிடப்பட்டது. ஆழமான புரிதலை உறுதி செய்வதற்காக, அமர்வுகள் அனுபவம் வாய்ந்த படையலகுகளின் கட்டளை அதிகாரிகளால் வழிநடத்தப்பட்டன. அத்துடன் மேஜர் ஜெனரல் எம்பீ கருணாரத்ன (ஓய்வு) ஐஜீ அவர்கள் அதிகாரிகளின் அறிவை விரிவுபடுத்தும் நிமித்தம் நிகழ்கால நிகழ்வுகள் தொடர்பான மதிப்புமிக்க விரிவுரையை வழங்கினார்.