Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th January 2024 16:22:28 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 125 கி.வோ சூரிய மின் நிலையம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ அவர்கள் டிசம்பர் 03 அன்று முகாம் வளாகத்தில் புதிய 125 கி.வோ சூரிய சக்தி ஆலையை திறந்து வைத்தார். இந்த ஆலை தேசிய மின் கட்டமைப்பிற்கு மாதந்தோறும் 15,000 கிலோ வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அதே நேரத்தில் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் இராணுவ வீரர்களின் நலனுக்காக பங்களிக்கும்.

இந்நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.