02nd May 2025 15:23:33 Hours
6 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 மார்ச் 10 ஆம் திகதி உடையார்கட்டிலுள்ள முல்/மூங்கிலாறு ஆரம்ப பாடசாலையில் அப்பிரதேச பொதுமக்களின் பங்கேற்புடன் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர். அதே போன்று, 6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 2025 மார்ச் 10 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் (கிழக்கு) பிரதேசத்தில் சிரமதான திட்டத்தை நடாத்தினர்.