Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th May 2020 16:31:57 Hours

வன்னி தளபதியின் உத்தியோக பூர்வ விஜயம்

வன்னி பாதுகாப்புப் படையின் புதிய தளபதியாக அண்மையில் பதவியேற்ற பின்னர் 54 ஆவது படைப்பிரிவு தலைமையகத்திற்கும் அதன் கீழ் உள்ள கட்டமைப்புகளுக்கு 23 ம் திகதி சனிக்கிழமை தனது விஜயத்தை மேற்கொண்டார். .

54 வது படைப்பிரிவினால் இராணுவ பாதுகாப்பு அணிவகுப்பில் வரவேற்கப்பட்டார். அதனை தொடர்ந்து 54 அவது படைபிரிவுத் தளபதி மேஜர் ஜெனரல் இந்திரஜித் பண்டார படைபிரிவு வகிப்பங்கு மற்றும் பணிகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

பின்னர் 542 ஆவது படையின் ஏற்பாட்டில் வில்பத்து பகுதியில் மரம் நடும் திட்டத்தில் இணைந்துக் கொண்டார். தொடர்ந்து 7 ம் மற்றும் 8 ம் விஜயபாகு காலாட்படை படைகளுக்கு விஜயம் செய்தார். அதன்பிறகு 54 ஆவது படைப்பிரிவு தலைமையகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிலவத்துறை பகுதியின் ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை பகிர்ந்தளித்தார்.

மன்னார் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை (கலாநிதி) இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சந்தித்து இன நல்லிணக்கம் மற்றும் மீளமைப்பு தொடர்பாக கருத்துகளை பரிமாறிக் கொண்டார்.

541, 542, 543 மற்றும் 544 படைகளின் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் வன்னி தளபதியின் இவ் விஜயத்தின் போது இணைந்திருந்தனர். buy footwear | Womens Shoes Footwear & Shoes Online