17th May 2025 19:06:47 Hours
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை பணியின் செயல்திறன், வள பயன்பாடு, கொள்கை செயல்திறன் மற்றும் நிர்வாக மற்றும் கட்டமைப்பு அம்சங்களை மையமாகக் கொண்ட 15 வது இலங்கைப் பாதுகாப்பு படை குழுவின் காலாண்டு மதிப்பீடு, லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் மதிப்பீட்டு பிரிவால் வெள்ளிக்கிழமை 2025 மே 09 அன்று ஸ்ரீ பேஸ் கேம்பில் ஆரம்பிக்கப்பட்டது.
காலாண்டு மதிப்பீடு லெபனானில் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு படையினரின் பொருத்தத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. 15 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவின் பணியாளர், செயல்பாடுகள், சூழ்நிலை விழிப்புணர்வு, பயிற்சி, தகவல் தொடர்பு மற்றும் வழங்கள் முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளின் கீழ் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.