16th October 2023 22:01:46 Hours
ருஹுணு பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரிகளுக்கு தலைமைத்துவ பண்புகள் மற்றும் அவதான திறன்களின் பெறுமதியை கற்பிப்பதற்காக 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் 3 அதிகாரிகள் மற்றும் 7 சிப்பாய்கள் வியாழக்கிழமை (ஒக்டோபர் 5) அன்று ஒரு செயலமர்வை நடாத்துவதற்கு பங்களித்தனர்.
65 இளங்கலை பட்டதாரிகள் பட்டறையின் போது தலைமைத்துவம், வரைபட வாசிப்பு மற்றும் உணவறை முறைமை மற்றும் திறன்களை மேம்படுத்துதல் பற்றி அறிந்து கொண்டனர்.
613 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் கேஏடிஎன்ஆர் கன்னங்கர ஆர்எஸ்பீ ஐஜி மற்றும் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பீஏஜிஏபீ மதித்தபால இந்த செயலமர்வில் கலந்து கொண்டனர்.