10th August 2024 12:44:37 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ மற்றும் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஎஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்ப பீஏஸ்சீ ஆகியோர்களின் வழிக்காட்டலின் கீழ் 5 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் ராஜவெவ, தல்கஸ்வெவவில் வசிக்கும் பயனாளி ஒருவருக்கான புதிய வீடு 2024 ஆகஸ்ட் 7 அன்று நிறைவு செய்யப்பட்டது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. திட்டத்திற்கான நிதியுதவியை திரு. சந்துஷ்வீரமன் அவர்கள் வழங்கினார். மேலும், திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஐந்து பசுக்கள் தானமாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அரச அதிகாரிகள் சிப்பாய்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.