11th May 2025 12:19:39 Hours
ரம்பொடவின் கெரண்டி எல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடந்த பேருந்து விபத்தைத் தொடர்ந்து, அவசர நடவடிக்கை மற்றும் பொது சேவைக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் மீட்பு மற்றும் வெளியேற்றும் பணிகளில் இலங்கை இராணுவத்தினர் முக்கிய பங்காற்றினர்.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து, சாலையை விட்டு விலகி செங்குத்தான பள்ளத்தாக்கில் விழுந்ததில், அதில் பயணித்த பலர் காயமடைந்தனர்.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது காலாட் படைப்பிரிவின் 642 வது காலாட் பிரிகேடின் 3 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் சம்பவ இடத்திற்கு முதலில் விரைந்து சென்றனர். இவர்களுடன் 2 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படையினர் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தனர்.
படையினர் விரைவாக மீட்புப் பணிகளைத் தொடங்கியதுடன், காயமடைந்த பலருக்கு முதலுதவி அளித்தனர். அதே நேரத்தில் விபத்துக்குள்ளானவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவினார்.
காயமடைந்தவர்கள் பிரதேசவாசிகள் மற்றும் அவசர சேவைகளின் ஆதரவுடன் கொத்மலே, நுவரெலியா, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த முழு பணியும் 3 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் என். ரத்நாயக்க அவர்களால் நெருக்கமாக மேற்பார்வையிடப்பட்டது. ஏனைய தொடர்புடைய தளபதிகளின் வழிகாட்டுதல், ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் திறமையான அவசரகால பணியை உறுதி செய்தது.