Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th May 2024 19:39:21 Hours

மேலும் ஒரு தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டல்

குட்டிவில, கிரிந்திவெலயில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பத்திற்கு வீடு நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 09 மே 2024 அன்று இடம்பெற்றது.

8 வது இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் மேற்பார்வையின் கீழ் 8 வது இலேசாயுத காலாட் படையணி படையினரால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 8 வது இலேசாயுத காலாட் படையணி படையினரால் மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகளுக்கு அப்பகுதியில் உள்ள நன்கொடையளர்கள் நிதி அனுசரணையை வழங்கினர்.

141 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஆர்ஆர் டி எஸ் தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந் நிகழ்வின் போது 8 வது இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி, அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.