08th November 2024 14:52:54 Hours
பயிற்சி நாள் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, "தலைமைத்துவத்திற்கான உளவியல் அணுகுமுறை" என்பதை மையமாகக் கொண்ட விரிவுரை மற்றும் நடைமுறை அமர்வு 6 நவம்பர் 2024 அன்று 4 வது இலங்கை பீரங்கிப் படையணி தலைமையகத்தில் நடத்தப்பட்டது.
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் லெப்டினன் கேணல் ஜீஜீஎம்ஜீ டி சில்வா அவர்களால் இவ் விரிவுரை நடத்தப்பட்டது.
விரிவுரையில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.