Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th February 2024 12:04:40 Hours

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் வாகன பராமரிப்பு குறித்த பட்டறை

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் உட்பட 313 படையினரின் பங்கேற்புடன் 22 பெப்ரவரி 2024 அன்று பனாகொட இராணுவ உள்ளக அரங்கில் ‘வாகனப் பராமரிப்பு’ தொடர்பான ஒரு நாள் செயலமர்வு நடாத்தப்பட்டது.

இலங்கை இராணுவ சேவைப் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி ll ஏஎச்எஸ்ஜி நந்திக மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரி ll டிஎம்எஸ் தஹனக ஆகியோரால் நடத்தப்பட்ட வாகன பராமரிப்பு தொடர்பான விரிவுரைகளுடன் இந்த செயலமர்வு இடம்பெற்றது. இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி பணிநிலை சார்ஜன் கே.பீ வஹிகல்தெனிய தொழில்நுட்ப குறைபாடுகளை கண்டறிவது தொடர்பான நுண்ணறிவுகளை வழங்கினார். மேலும், இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சார்ஜன் சிஎச்எம்எஸ்கே ஹேரத் வீதி ஒழுக்கம் பற்றிய விரிவுரையை வழங்கினார். மேலும், பாடங்கள் குறித்த விரிவுரைகளின் முடிவில் செயன்முறை விளக்கங்களும் நடத்தப்பட்டன.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ மற்றும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி பிரிகேடியர் ஆர்டி சல்லே என்டிசி அவர்கள் இந்த செயலமர்வை ஏற்பாடு செய்வதற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கினர்.