16th September 2021 14:22:50 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வட மத்திய முன்னரங்கு பராமரிப்பு பகுதிகளுக்கு நீண்ட காலமாக தளபதியாக கடமையாற்றிய இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையின் பிரிகேடியர் பிரியந்த சில்வா அவர்களின் சேவைக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்ட பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் வியாழக்கிழமை (16) அவருக்கான “மேஜர் ஜெனரல்” நிலை உயர்வுக்கான சின்னத்தையும் அணிவித்தார்.
வியாழக்கிழமையன்று இடம்பெற்ற மேற்படி நிகழ்வின் போது நிலை உயர்வு பெற்ற அதிகாரிக்கு வாழ்த்துக்களை கூறிக்கொண்ட தளபதி ஏனைய முன்னரங்கு பராமரிப்பு பகுதிகள் மற்றும் தலைமையகங்களை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் அவரிடம் கலந்துரையாடினார்.
இதன்போது மேஜர் ஜெனரல் நிலை உயர்வு மற்றும் அதிகாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான சின்னமாக வாள் ஒன்றை வழங்கி வைத்த தளபதி, அவரது நிலை உயர்விற்கும் முன்னரங்கு பாதுகாப்பு பகுதிகளில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் செயற்பாடுகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனையடுத்து பதவி உயர்வு பெற்ற அதிகாரி தனக்கு அங்கிகாரம் அளித்தமைக்கும் பாரட்டு தெரிவித்தமைக்கும் தளபதிக்கு நன்றிகளை கூறிக்கொண்டார்.