Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th October 2023 21:33:24 Hours

முல்லைத்தீவு படையினர் இராணுவ தினத்தை முன்னிட்டு இரத்த தானம்

74 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64 வது காலாட் படைப்பிரிவில் சேவையாற்றும் 90 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களால் ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 15) முல்லைத்தீவு மருத்துவமனையில் இரத்ததானம் வழங்கும் பணியை முன்னெடுத்தனர்.

64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.எஸ்.தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் இந்த திட்டத்திற்கு ஊக்குவிப்பு வழங்கினார்.முல்லைத்தீவு வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உட்பட 10 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் இத் திட்டத்திற்கான சேவையை வழங்கினர்.

641, 642, மற்றும் 643 வது காலாட் பிரிகேட் மற்றும் 8 வது இலங்கை பீரங்கி படையணி, 23 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 5 வது (தொ) இலங்கை சிங்க படையணி ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி 90 இராணுவத்தினர் இத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.