Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st May 2023 20:06:51 Hours

முல்லைத்தீவு படையினருக்கு ‘மன அழுத்த முகாமைத்துவம் மற்றும் தொழில் வாழ்க்கை சமநிலை’ தொடர்பான விரிவுரை

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 'மன அழுத்த முகாமைத்துவம், தொழில் வாழ்க்கை சமநிலை' மற்றும் 'சிப்பாய்களின் பெருமை' ஆகிய தலைப்புகளில் சனிக்கிழமை மே 27 முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் விரிவுரை வழங்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் கேஎச்கே கோட்டவத்த (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்கள், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் அழைப்பின் பேரில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்து இவ் விரிவுரையை நடாத்தினார்.

65 அதிகாரிகள் மற்றும் 180 சிப்பாய்கள் இவ் விரிவுரையில் பங்குபற்றினர். விரிவுரையின் இறுதியில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி விரிவுரையாளரின் பங்களிப்பைப் பாராட்டி சிறப்பு நினைவுச் சின்னம் வழங்கினார்.

அத்துடன் அதே நாளில் 57 வது காலாட் படைப்பிரிவின் 41 அதிகாரிகள் மற்றும் 172 சிப்பாய்களின் பங்குபற்றுதலுடன் அதே விரிவுரை நிகழ்த்தப்பட்டது.