15th May 2025 15:55:04 Hours
வெசாக் போயா தினத்தை முன்னிட்டு, 2025 மே 14 அன்று கிளிநொச்சி இராணுவத் தள மருத்துவமனையில் முதலாம் படை படையினரால் இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
கிளிநொச்சி பொது மருத்துவமனை இரத்த வங்கியின் ஆதரவுடன் இந்த நிகழ்வு முன்னெடுகப்பட்டது. முதலாம் படை தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது. மொத்தம் 05 அதிகாரிகள் மற்றும் 130 சிப்பாய்கள் இரத்த தானம் வழங்கினர்.