05th March 2024 14:09:27 Hours
மின்னேரிய காலாட்படை பயிற்சி மையத்தினால் நடத்தப்பட்ட படையலகு ஆதரவு ஆயுத பயிற்சி பாடநெறி 02 மார்ச் 2024 அன்று நிறைவடைந்தது. 2024 பெப்ரவரி 13 ஆம் திகதி 04 அதிகாரிகள் மற்றும் 25 சிப்பாய்களின் பங்கேற்புடன் இந்தப் பாடநெறி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மின்னேரிய காலாட்படை பயிற்சி மையத்தின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூபிஜேகே விமலரத்ன ஆட்ப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் கலந்துகொண்டு நிறைவுரையை நிகழ்த்தினார்.
நிறைவு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.