24th November 2023 06:08:00 Hours
பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதியும், மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் பல பரிமான ஒருங்கிணைந்த நிலைப்படுத்தல் பணி (மினுஸ்மா) தலைவருமான திரு. எம். எல்-காசிம் வேன் தலைமையிலான குழு மினுஸ்மா வடக்கு பிரிவு நடவடிக்கைகளின் உச்சக்கட்டத்தை முறையாகக் குறிக்கும் வகையில், நவம்பர் 2023 வியாழக்கிழமை (09) அன்று காவே சூப்பர் முகாமுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டது.
இந்த விஜயத்தின் போது, பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி பொதுமக்கள் மற்றும் இராணுவ சிவிலியன்கள் மற்றும் இராணுவத் தலைமைகள் உட்பட வடக்கு மற்றும் கிழக்கு பிரிவுகளில் படையினர் வழங்கும் பற்றி உயர்வாகப் பேசினார். இது தற்போது, 'மாவட்டம் கிழக்கு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரு பிரிவுகளிலும் நிலையான சூழலை உருவாக்க, மகத்தான சேவையாற்றிய, அனைத்து ‘நீல தலைகவச’ அமைதி காக்கும் படையினருக்கும், சிவில் பணியாளர்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
மேலும், வருகை தந்த பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி மினுஸ்மாவின் பாதுகாப்பான மற்றும் அமைதியான உச்சகட்ட செயல்முறைக்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
மேலும் மினுஸ்மாவிற்கு ஆற்றிய பெறுமதியான மற்றும் தொழில்சார் சேவைகளைப் பாராட்டி இலங்கைக் குழுவிற்கும் மேலும் மூன்று நாடுகளுக்கும் மினுஸ்மா படைத் தளபதியின் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மினுஸ்மா கிழக்கு மாவட்ட கட்டளைத் தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை அமைதிகாக்கும் படையணியின் 5 வது குழுவினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.