08th June 2024 22:24:19 Hours
மாதுரு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் 2024 ஓகஸ்ட் 05 முதல் 18 வரை நடைபெறவிருக்கும் ‘மித்ரசக்தி பயிற்சி 10’க்கான இறுதி திட்டமிடல் கலந்துரையாடல் 04 ஜூன் 2024 அன்று நடத்தப்பட்டது.
காலாட்படை பணிப்பகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியூபி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு அவர்கள் இக் கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கினார். இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 18 அதிகாரிகள் மற்றும் 102 சிப்பாய்கள் கொண்ட குழு இலங்கையில் நடைபெறும் இப் பயிற்சியில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலந்துரையாடலின் போது, இரு தரப்பினரும் ‘மித்ரசக்தி பயிற்சி 10’ தொடர்பான முக்கியமான விடயங்களைப் பற்றி கலந்துரையாடினர்.
இந்நிகழ்வில் 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, இராணுவ போர் பயிற்சி பாடசாலையின் தளபதி, காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர், இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 03 சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.