17th April 2023 18:06:02 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதியும் , இராணுவத் தளபதி மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சேவை வனிதையர் பிரிவு மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி ஜானகி லியனகே ஆகியோரின் முயற்சியில் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவு மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவு வழங்கிய நிதியுதவியில் அப் படையணி தலைமையகம் வியாழக்கிழமை (ஏப்ரல் 06), நாவின்ன வாரியபொலவை சேர்ந்த 2 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சார்ஜன் ஒருவரின் குடும்பத்தினருக்கு புதிய வீட்டினை நிர்மாணித்தது.
இந்த வீடு 2 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரால் நிர்மாணிக்கப்பட்டது. 2 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியில் பணியாற்றிய போது காலமான சார்ஜெனின் மனைவியான திருமதி ஆர்எம்ஜிஆர்கே ரத்நாயக்க அவர்களுக்கு வழங்கப்பட்டது.
சேவை வனிதையர் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்க நாட்டில் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் பல நன்கொடையாளர்கள் இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கினர். புதிய வீட்டின் உத்தியோகபூர்வ திறப்பு விழா நிகழ்வில் இறுதியில் முடிந்தவுடன், திருமதி லியனகே அவர்கள் குறித்த குடும்பத்திற்கு ஒரு பிளெண்டர், ரைஸ் குக்கர், பீங்கான் கண்ணாடிகள் மற்றும் சலவை இயந்திரம் போன்ற உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், நிலையத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.